ரயில் டிக்கெட் தொலைஞ்சு போச்சா? கவலைய விடுங்க.. இப்படி செஞ்சா பிரச்சினை இல்லை!
ரயில் பயணத்தின் போது டிக்கெட் தொலைந்துவிட்டதா? கவலை வேண்டாம்! இந்திய ரயில்வேயின் இந்த சூப்பரான வசதி இருக்கே!

ரயில் டிக்கெட் தொலைஞ்சு போச்சா? கவலைய விடுங்க.. இப்படி செஞ்சா பிரச்சினை இல்லை!
இந்தியாவில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் தங்களுடைய வேலை, படிப்பு, குடும்பம் என பல காரணங்களுக்காக ரயில்களில் பயணிக்கின்றனர். அப்படி ரயில் பயணத்தின் போது உங்கள் ரயில் டிக்கெட் தொலைந்துவிட்டால் என்ன செய்வது? இது குறித்து இந்திய ரயில்வே சில விதிமுறைகளை வகுத்துள்ளது. இந்த விதிமுறைகளை தெரிந்து கொள்வது உங்கள் பயணத்தை எளிதாக்கும்.
ரயில் டிக்கெட் தொலைந்தால் நீங்கள் பதற்றப்பட வேண்டாம். முதலில், உங்கள் டிக்கெட் ரயில் நிலைய டிக்கெட் கவுண்டரில் வாங்கியதா அல்லது ஆன்லைனில் (e-ticket) வாங்கியதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். டிக்கெட் கவுண்டரில் வாங்கிய டிக்கெட்டை ரயில் நிலையத்தில் முன்பதிவு படிவத்தை பூர்த்தி செய்து பெறுவீர்கள். ஆன்லைன் டிக்கெட் என்றால், IRCTC இணையதளம் அல்லது மொபைல் செயலி மூலம் முன்பதிவு செய்திருப்பீர்கள்.
