நவ.1 ஆம் தேதி ஸ்கூல் லீவு இல்லை.. சோகத்தில் மூழ்கிய திருவள்ளூர் மாணவர்கள்!
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நவம்பர் 1 ஆம் தேதி பள்ளி வேலை நாளாக செயல்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்து உள்ளார்.

நவ.1 ஆம் தேதி ஸ்கூல் லீவு இல்லை.. சோகத்தில் மூழ்கிய திருவள்ளூர் மாணவர்கள்!
திருவள்ளூர் மாவட்டத்தில், வரவிருக்கும் நவம்பர் 1 ஆம் தேதி (சனிக்கிழமை) பள்ளிகள் வழக்கமான நேர அட்டவணைப்படி முழு நேரமாக செயல்படும் என திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்து உள்ளார்.
சமீபத்தில் திருவள்ளூர் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, அக்டோபர் 22 ஆம் தேதி (புதன்கிழமை) பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு இருந்தது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில், மாணவர்கள் கல்வி செயல்பாடுகளில் இடைவெளி ஏற்படாதபடி, நவம்பர் 1 ஆம் தேதி சிறப்பு வேலை நாளாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மாணவர்கள் முழுமையான வருகையுடன் பள்ளிக்கு வர வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை வலியுறுத்தி உள்ளது.
